ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய பணியாளர் கைது

 

ராமேஸ்வரம், ஜூன் 29: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முன்னாள் ராணுவ வீரர் ஜெயராமன்(57) நான்கு ஆண்டுகளாக உதவி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர் பிரபு (எ) பிரபாகரன் திடீரென ஜெயராமனை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரையிடம், ஜெயராமன் புகார் தெரிவித்தார். பிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இணை ஆணையர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று யாத்திரை பணியாளர் பிரவுவை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் பிரபு குறுக்கு வழியில் பக்தர்களை தீர்த்தம் மற்றும் தரிசனத்திற்கு அழைத்து செல்வதை கண்காணித்த ஜெயராமன், அதன் சிசிடிவி காட்சிகளை இனை ஆணையருக்கு அனுப்பி உள்ளார். இணை ஆணையர் யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரனுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரித்துள்ளார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த பிரவு ஜெயராமனை தாக்கியது தெரியவந்தது. ஆனால் பிரபு தரப்பில் கோயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஜெயராமன் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: