×

இனி எல்லாம் ஏசிதான் குளிரூட்டும் அமைச்சர்

சேலம்: சேலத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் குக்கிராமங்களையும், மாநகரங்களையும் இணைக்கும் வகையில், பஸ் போக்குவரத்து இருக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். நான் பயணம் செய்வது போல் பேருந்துகள் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இனி ஏசி பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதன்படியே, இனி வாங்கப்படும் அனைத்து பேருந்துகளும் ஏசி பேருந்துகளாக வாங்கப்படும். போக்குவரத்துத் துறையின் வருவாயை பெருக்க செயல் திட்டம் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Salem ,Tamil Nadu ,Minister ,Vijay Thamizhan Parthiban ,Chief Minister ,
× RELATED ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ” தஞ்சை...