சென்னை: என்எல்சி நிறுவன பங்குகளை விற்க முயலும் மத்திய அரசு, என்எல்சி நிர்வாகத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று என்எல்சி பங்குகளை தமிழ்நாடு அரசே வாங்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். என்எல்சி நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்த அதிமுக போராடும் என தெரிவித்தார்.
