சேலம், ஜூன் 25: சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்த பிரபாகரன் கோஷ்டியினருக்கும், அசோக்(எ)பச்சைக்கிளி கோஷ்டிக்கும் கடந்த 22ம்தேதி மோதல் ஏற்பட்டது. இதில் பச்சைக்கிளி தரப்பினர் கத்தியால் வெட்டியதில் பிரபாகரன் காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவுடி அசோக்(எ) பச்சைக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக பச்சப்பட்டியை சேர்ந்த ரவுடி பாலா(21), ஆறுமுகநகரை சேர்ந்த கணேசன்(21) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
