சென்னை: பஞ்ச் டயலாக், விசில் அடிப்பது, குட்டிக் கதை கூறி பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது நல்லதல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மின் வெட்டு, விவசாயிகல் பிரச்சனை, பாலியல் குற்றங்கள் பற்றி ஒரு 5 நிமிடமாவது முதல்வர் பேசுவாரா..? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது சமூக வலைதள பதிவில்;
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை விஜயின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல….
“5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல” என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க….
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!! என கூறியுள்ளார்.
