லண்டன்: பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று பதவி விலகினார். இதன் மூலம் பல நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. பிரிட்டன் பிரதமரானகெய்ர் ஸ்டார்மருக்கு அவரின் சொந்த கட்சியான தொழிலாளர் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அமைச்சர்கள் சிலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் ஸ்டார்மருக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. தொடரும் நெருக்கடி எதிரொலியாக அவர் எப்போது வேண்டுமானாலும் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும், அடுத்து பிரதமராக வர உள்ளவருக்கு தமது ஆதரவு உண்டு என்றும் ஸ்டார்மர் தெரிவித்தார். முன்னதாக தமது பதவி விலகல் கடிதத்தை அளிக்க ஸ்டார்மர் தமது மனைவியுடன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியில் வந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்த தருணம் மிகவும் பெருமையான தருணம். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கத்துடன் அரசியலில் நுழைந்தேன் என்று அவர் கூறினார்.
