சுவிட்சர்லாந்தில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், ஈரான் அதிகாரிகள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இருந்து ஈரான் குழு பாதியில் வெளியேறியது. அமெரிக்கா மிரட்டல் விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் குழு பாதியில் வெளியேறியது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, முக்கிய அம்சங்களை செயல்படுத்துவது பற்றி அமெரிக்கா-ஈரான் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் என்ற இடத்தில் நடந்த பேச்சில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்றார். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகரும் அதிகாரிகளும் அமெரிக்கா உடனான பேச்சில் பங்கேற்றார்
