தோஹா: கத்தாரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் சிலர் காயமடைந்தனர். வளைகுடா நாடான கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு ஆலையில் நேற்று இரவு ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 18 பேர் மாயமாகியுள்ளனர் என கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாயகரமான கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மாயமான தொழிலாளர்களைக் கண்டறிய கத்தாரின் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவினர், சிவில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
