சென்னை: வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை. பருவ மழையின் போது வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏரிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரலாற்றில் இடம் பிடிக்கலாமே என பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
