சென்னை: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ‘மேகதாது பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். முறைப்படி கடிதம் கொடுத்தும் மேகதாது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்’ என எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
