ரேஷன் கடையில் கூட்டுறவு பதிவாளர் ஆய்வு

 

செங்கல்பட்டு, ஜூன் 22: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மற்றும் நுகர்வோர் பணிகள் தர்பகராஜ் மாமல்லபுரத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடைகளில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டர். அப்போது பொருட்களின் தரம், எடை அளவு, கைரேகை, சரக்கிருப்பு, பணியாளர் அணுகுமுறை பற்றி பொதுமக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி மற்றும் செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் கலையரசன், பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் சாவித்திரி மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள், கள அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: