உத்திரமேரூர் அருகே கிராம மக்களுக்கு மஞ்சள் பை வழங்கல்

 

உத்திரமேரூர், ஜூன் 9: உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழியை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கீதா உதயகுமார் தலைமை தாங்கினார். தன்னார்வலர் நாகராஜன், உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் சோழனூர் ஏழுமலை, குணசேகரன், நசீர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தனியார் தொண்டு நிறுவன மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். இதில் அனைத்து மக்களும் நெகிழி பயன்பாட்டினை குறைத்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும், வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை-மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிட வேண்டும், இயற்கையை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி விளக்கம் தரப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் மஞ்சள் பை விநியோகிக்கப்பட்டது.

Related Stories: