மொபட்டில் சென்றபோது மாஞ்சா நூலில் சிக்கி பெண் படுகாயம்

 

குன்றத்தூர், ஜூன் 9: மாதவரம் பகுதியை சேர்ந்தவர் மாலா (38), தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் முருகன். இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில், கோயம்பேட்டில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோயிலுக்கு மொபட்டில் தனது தோழி கவிதாவுடன் சென்றுள்ளார். கொளத்தூர் ரெட்டேரி மேம்பால பகுதியில் சென்றபோது அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல், மொபட்டில் சென்ற மாலா முகத்தில் சிக்கி, இரு கண்கள் மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனே, தோழி உள்பட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மாலா கொடுத்த புகாரின்படி, ராஜமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட்டவர்களை பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: