திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஆவடி ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவர் ம.இராஜி தலைமை வகிக்கிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆ.கிருஷ்ணசாமி, கே.ஜெ.ரமேஷ், பிரபு கஜேந்திரன், சி.ஜெரால்டு, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்திரி தர், பா. நரேஷ்குமார், த.எத்திராஜ், ஜி.விமல் வர்ஷன், எம்.முத்தமிழ்ச்செல்வன், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வே.தியாகராஜன், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் வரவேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில், பிஎம் திட்டம், சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழிக் கொள்கை, உயர்கல்வியை மையப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படுவதாக கூறப்படும் மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் தமிழகத்தின் கல்வி உரிமை, மொழி உரிமை,மாநில உரிமைகளை பாதிக்கும் என கருதப்படும் இந்த திட்டங்களுக்கு எதிராக மாணவரணியின் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்தும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23ம்தேதி நடைபெறவுள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட மாணவரணி சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விரிவான செயல் திட்டமும் இறுதி செய்யப்பட உள்ளது.
எனவே, ஆலோசனை கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
