தவெகவில் இணைய திட்டமா? செல்லூர் ராஜூ ‘லக லக’ பதிவு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்து தோல்வி அடைந்தார். இதன்பிறகு கட்சி பிளவாலும், ஒற்றுமை இல்லாததாலும் தான் அதிமுக தோற்றது என்ற மன வருத்தம் அவரிடம் இருந்தது. இதுதொடர்பாக நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த பல மாஜி அமைச்சர்கள் தவெகவிற்கு தாவி வரும் நிலையில், செல்லூர் ராஜூவும் தவெகவிற்கு போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக கசிந்து கொண்டிருக்கிறது. ‘இன்று போகிறார், நாளை போகிறார்’ என்ற அன்றாட செய்திகளால் அதிர்ந்து போன செல்லூர் ராஜூ, நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு மீண்டும் பேசுபொருளாகிவிட்டது. அவரது பதிவில் கூறியிருப்பதாவது:

ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் எம்ஜிஆர், ஜெயலலதாவின் வழியில் தான். ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என் வழி என அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது வழக்கமான பாணியில் பதிலளித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவும் பேசுபொருளாகி விட்டது.

 

Related Stories: