கோவை, ஜூன் 19: கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வித்யா பாரதி உச்ச சிக்ஷா சன்ஸ்தான் மற்றும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இணைந்து நடத்தும் ‘பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் புரோகிராம் 2.0’ என்ற 10 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இந்த முகாமில், உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் 2 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான எஸ்.மலர்விழி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெகஜீவன் வரவேற்றார். இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் கனகசபாபதி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் வித்யா பாரதி உச்ச சிக்ஷா சன்ஸ்தான் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் கே.என்.ரகுநந்தன், அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் கே.சுந்தரராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் விஜயசாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.
