தேசிய சிலம்ப போட்டியில் எஸ்என்எஸ் அகாடமி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை

 

கோவை, ஜூன் 19: கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள எஸ்என்எஸ் அகாடமியின் 6-ம் வகுப்பு வகுப்பு மாணவி எஸ்.கோவர்ஷினி டியா, வகுப்பறையை தாண்டி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் கோவை டிவிஎஸ் நகர், தடாகம் சாலையில் உள்ள கே.வி.எம். மஹாலில் நடைபெற்ற 4வது தேசிய சிலம்ப போட்டி 2026-ல் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், 8 முதல் 10 வயது பிரிவில் பங்கேற்று கோவர்ஷினி டியா, தனது சிறந்த திறமை, ஒருமுக கவனம் மற்றும் விடாமுயற்சியால் முதலிடம் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

எஸ்என்எஸ் அகாடமியில், மாணவர்கள் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை கண்டறிந்து வளர்த்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கோவர்ஷினியின் இந்த சாதனை, பள்ளியின் முழுமையான கல்வி அணுகுமுறையையும், நமது பாரம்பரிய வீரக் கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. கோவர்ஷினி டியாவின் மகத்தான வெற்றிக்காக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, எதிர்காலத்திலும் மேலும் பல வெற்றிகளை பெற்று உயர எஸ்என்எஸ் அகாடமி குடும்பத்தினர் வாழ்த்தினர்.

Related Stories: