சேந்தமங்கலம், ஜூன் 19: எருமப்பட்டி பேரூராட்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
எருமப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், செயல் அலுவலர் கலைராணி தலைமையில், இளநிலை உதவியாளர் வீரமணி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக கடைவீதி, ஐயர் மேடு, புதிய பஸ் நிலையம், கைகாட்டி, வாரச்சந்தை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, பூக்கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.5400 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
