நாமக்கல், ஜூன் 11:நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களைத் தெரிவிக்கும் சிறப்பு குறைதீர் முகாம், வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
