திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை: சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 671 கன அடி நீர்வரத்து

 

திருவண்ணாமலை, ஜூன் 19:திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 671 கன அடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர கோடை காலம் முடிந்த பிறகும், வெயிலில் தாக்கம் மட்டும் குறையவில்லை. ஆனாலும், இடை இடையே திடீரென பெய்யும் மழை கோடை வெப்பத்துக்கு ஆறுதலை அளிக்கிறது.
அதன்படி, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம் செய்யாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை பரவலான மழை பெய்தது. அதனால் கோடை வெயில் நேற்று தணிந்து காணப்பட்டது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Related Stories: