நிலத்தகராறில் தம்பதியை கல்லால் தாக்கிய தந்தை, மகன்: போலீஸ் வலை

 

செய்யாறு, ஜூன் 18: நிலத்தகராறில் தம்பதியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(45), விவசாயி. இவரது மனைவி வேண்டா(39). இவர்களுக்கும், பன்னீர்செல்வத்தின் தம்பி ராமஜெயம் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி பன்னீர்செல்வம் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமஜெயத்தின் மகன் பச்சையப்பன், பன்னீர்செல்வத்தை ஆபாசமாக பேசினாராம். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

Related Stories: