சென்னை: சட்டப்பேரவை ஆளுநர் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பேரளவில் அறிவித்த அரசுக்கு திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ. தங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை பின்வருமாறு: புதிய அரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ள நிலையில், தலைமை செயலகத்திற்கு தினந்தோறும் 1000க்கானக்கான மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, துறை சார்ந்த அமைச்சரிடமும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் மனு அளிக்க கோட்டைக்கு தினந்தோறும் வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறை துணை கொண்டு அவர்களை தலைமைச் செயலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி துன்புறுத்தி
வெளியே துரத்தும் இந்த அரசு,
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை” எப்படி பாதுகாக்கும், இதற்கு சட்டமன்ற ஆளுநர் உரையில் ஒரு அறிக்கையா? என்பதை நினைத்து லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் வேதனையில் உள்ளனர்!
எனவே, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் எப்படி, மாற்றுத்திறனாளிகள் சமூகம் நிபந்தனை இன்றியும், காவல்துறை தொந்தரவு இன்றியும் எளிய முறையில் கோட்டைக்குச் சென்று துறை சார்ந்த அமைச்சர்களிடமும், துறை சார்ந்த அதிகாரியிடமும் அணுகி தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தார்கள், அதற்கு அதிகாரிகள் தீர்வும் கண்டு நிறைவேற்றினார்கள்.
அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமூகம் எவ்வித கட்டுப்பாடும் இன்றியும், நிபந்தனை இன்றியும், சிரமமின்றி கோட்டைக்கு உள்ளே சென்று துறை சார்ந்த அமைச்சர்களிடமும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் நேரில் சந்தித்து தங்களின் மனு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் திமுக மாற்றுத் திறனாளிகள் அணியின் மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் தெரிவித்துள்ளார் .
