- சேலம்
- மருத்துவ கல்வி இயக்குநரகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மருத்துவ கல்வி ஆய்வு இயக்குநரகம்
- தமிழிசை,
- சென்னை, மதுரா, Ph.D.
- கல்லூரி ஆஃப் பார்மஸ
சேலம், ஜூன் 18: தமிழகத்தில் உள்ள 10 அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதிதாக மருந்தியல் படிப்பு தொடங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் சென்னை, மதுரையில் பி.பார்ம் மருந்தியல் கல்லூரியும், தஞ்சாவூர், மதுரை, கோவையில் டி.பார்ம் மருந்தியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு மருந்தியல் கல்லூரிகளில் டி.பார்ம் பட்டயபடிப்பில் 240 இடங்கள், இளநிலை பி.பார்ம் படிப்பில் 120 இடங்கள், முதுகலை எம்.பார்ம் படிப்பில் 85 இடங்கள் உள்ளது. அதேபோல், மாநிலம் முழுவதும் 101 தனியார் மருந்தியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தியல் கல்லூரிகளில் டி.பார்ம் பட்டய படிப்பில் 6 ஆயிரத்து 360 இடங்கள், இளநிலை பி.பார்ம் படிப்பில் 9 ஆயிரத்து 90 இடங்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 210 இடங்கள், முதுகலை எம்.பார்ம் படிப்பில் 1,372 இடங்கள் உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரியில் சேர ஒவ்வொரு வருடமும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கவுன்சலிங் மூலம் சேர்க்கை இடம் கிடைத்த மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசு கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
