×

40 மனுக்கள் மீது உடனடி தீர்வு

 

ஆத்தூர், ஜூன் 18: ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஆத்தூர் ஆர்டிஓ தமிழ்மணி தலைமையில் ஜமாபந்தி நடந்தன. இதில் மல்லியகரை, ஆத்தூர் பிர்க்கா பகுதியிலிருந்து கலைஞர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், கணினி சிட்டா மாறுதல், குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 469 மனுக்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டது. இதில் உடனடியாக 40 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையை ஆத்தூர் ஆர்டிஓ தமிழ்மணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் தாசில்தார் பாலாஜி, சமூக நல பாதுகாப்பு தாசில்தார் பாலாஜி, தலைமையிடத்து துணை தாசில்தார் ஹரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Attur ,Jamabandhi ,Attur Taluka Office ,Attur RTO Tamilmani ,Malliyakarai ,Attur Birkha ,
× RELATED அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலை...