கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் நாட்டின் மிக முக்கியமான பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயத்தின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
டார்மிஷன் கதீட்டில் தேவாலயம் தாக்குதலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. ஷெவ்சென்விப்ஸ்கி மாவட்டத்தில் சுமார் 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
