சென்னை: சென்னை அடுத்த வேலப்பன்சாவடியில் இயங்கி வரும் பெயிண்ட் உற்பத்தி ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீயில் எரிவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
