சென்னை: ஈஷா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. மரம் சார்ந்த பலபயிர் சாகுபடி விவசாய முறையை முன்னெடுத்து வருகிறோம். மண் வளம், மண்ணின் நீர்ப்பிடிக்கும் திறன், நதிநீர் வளம் ஆகியன இதனால் உயரும். விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.
பாரம்பரிய உணவுக்காடு முறையை மீண்டும் பரவலாக்கும் நோக்கில் பழங்களின் உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் 4 முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க forms.gle/rvAxzjx82Gn33uhp8 என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம் அல்லது 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என காவேரி கூக்குரல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
