பரதராமி அருகே போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

குடியாத்தம், ஜூன் 11: பரதராமி அருகே தனது மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை டார்ச்சர் செய்த தொழிலாளியை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் பூபாலன் (41), கட்டிட தொழிலாளி. இவர், 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் அடிக்கடி சென்று தனது மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த சிறுமியிடம் சென்ற பூபாலன் தன் மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பரதராமி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பூபாலன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: