காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திருப்பத்தூர், ஜூன் 11: காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் பர்குணன்(32). அவர் தனது உறவுக்காரரான 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை கடத்தி சென்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளை பர்குணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பர்குணனை நேற்று கைது செய்தனர். மேலும், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: