சென்னை: சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது’ என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குறித்து 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
