×

3892 பாட்டில்கள் பறிமுதல் உற்பத்தியாளர்களுக்கு ஜவுளி ஏற்றுமதி உதவி மையம்

கரூர், ஜூன் 8: கருர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசின் ஜவுளித் ஏற்றுமதி போட்டித் திறனைவலுப்படுத்தி, தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம், நாட்டில் கரூர் உட்பட ஆறு ஜவுளி குழுமங்களில் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி அலுவலகங்களில் முன் முயற்சி அடிப்படையில் ஜவுளி ஏற்றுமதி உதவி மையங்களை (TEFCs) செயல்படுத்திவருகிறது.

ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த சேவைமையமாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் TEFC-கள் நிறுவப்பட்டுள்ளன. இம்மையத்தின் மூலம் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல், HS குறியீடு (HS Classification) தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல். ஏற்றுமதி செயல் திட்டங்களை உருவாக்குவதில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவுதல், ஏற்றுமதி / இறக்குமதி சுங்கவரி தொடர்பான தகவல்களை வழங்குதல் மற்றும் பல்வேறு தடையற்றவர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் நன்மைகளை பயன்படுத்த உதவுதல், பல்வேறு நாடுகளின் தொழில்நுட்ப மற்றும், விதிமுறைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக வழிகாட்டுதல் வழங்குதல், அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய தகவல்களை பரப்புதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் புதிய ஏற்றுமதி சந்தைகளை ஆராய்வதற்கு உதவுதல் வழங்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எம்எஸ்எம் நிறுவனங்களுக்கு இணக்கப்பாடு தேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அவர்களின் ஒட்டுமொத்த போட்டித்திறனை மேம்படுத்துவதன் மூலம் இந்த மையம் பெரிதும் பயனளிக்கும். இந்தியாவின் ‘வீட்டு ஜவுளி தலைநகரமான கரூரில் இருந்து ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஆப்பிரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு, உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அனைத்து ஏற்றுமதியாளர்கள், வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கீழ்க்கண்ட முகவரியில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஜவுளி ஏற்றுமதி உதவி மையம், டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி பிராந்திய அலுவலகம் (இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம்) 2வது தளம், KVR வளாகம், 80 அடிசாலை, கரூர் – 639 002. தொலைபேசிஎண்: 04324 – 274871 மற்றும் krr.tc@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Tags : Center ,Karur ,District ,Collector ,Muthukumaran ,Government of India ,
× RELATED பயன்பெற வலியுறுத்தல் அரசு மானியத்தில் நுண்ணீர், சொட்டுநீர் பாசனம்