அரவக்குறிச்சி, ஜூன் 6: அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தரு தன்னார்வ அறக்கட்டளை சார்பில் வேலம்பாடி கிராத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக தேசிய தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து அதனை பராமரித்து வருகின்றனர்.
அரவக்குறிச்சி சி.எஸ் அறக்கட்டளை சார்பில் ஆறுமுகம் அகாடமி பள்ளி மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மேலும் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆறுமுகம் கல்வியாக தாளாளர் குப்புசாமி, முதல்வர் கண்ணன், துணை முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
