- செங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- கிருஷ்ணராயபுரம்
- கலெக்டர்
- முத்துக்குமாரன்
- சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி
- கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்
- கரூர்
கிருஷ்ணராயபுரம், ஜுன் 6: கிருஷ்ணராயபுரம் அருகே சின்ன சேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் முத்துக்குமரன் ஒன்றாம் வகுப்பு மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றார். கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சின்ன சேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளில் கலெக்டர் முத்துக்குமரன் நேரில் சென்று புதிதாக சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்று, அவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் புத்தகப் பை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை ராஜீ, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் (தொடக்கநிலை), திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) தனசேகரன், வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, மீனாட்சி, பள்ளி தலைமை ஆசிரியர் அன்புச் செல்வம்,ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், இடைநிலை ஆசிரியர்கள் உமாமங்கை, புவனேஸ்வரி, புஷ்பா ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
