×

கரூர் மாநகராட்சி புதிய ஆணையர் பதவியேற்பு

கரூர் ஜூன் 6: கரூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி எம்.பிரித்விராஜ் பொறுப்பேற்றார். அவருக்கு மேயர் கவிதா கணேசன். பூங்கொற்று கொடுத்து வரவேற்றார். முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் பிரித்விராஜூக்கு இதுவரை ஆணையராக பணியாற்றிய கே.எம்.சுதா, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் எஸ்பி கனகராஜ், அன்பரசன், வெங்கமேடு சக்திவேல்,

மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு, சுகாதாரக்குழு தலைவர் பசுவை சக்திவேல் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் புதிய ஆணையர் பிரித்விராகுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கரூர் மாநகராட்சிக்கு இதற்கு முன்பாக ரவிச்சந்திரன் சரவணகுமார், கே.எம். சுதா ஆகியோர் பணியாற்றிய போதிலும் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக பொறுப்பேற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்.

 

Tags : Commissioner ,Karur ,Municipality ,IAS ,M. Prithviraj ,Kavita Ganesan ,Blossom ,Prithviraj ,K. M. Sudha ,Mayor ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு