கோபி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோபியில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது. மீனவர் பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து பிரதமரை சந்தித்தபோது முதலமைச்சர் கலந்து ஆலோசித்துள்ளார். காவிரியில் வருகின்ற நீரை ஒரு சொட்டு தண்ணீரை கூட கர்நாடக அரசு தடுக்கக்கூடாது அனைத்தும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். மேகதாது அணையை தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து வருகிறார். பிரதமரிடம் மேகதாது அணை குறித்து முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கின்றார். ஆனால் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது சீக்ரெட். அதனை வெளியில் சொல்லக்கூடாது. எந்த காலக்கட்டத்திலும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம். சட்டரீதியாக தடுப்போம். இவ்வாறு கூறினார்.
அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி
கோவை சின்னியம்பாளையம் அருகே தனியார் கல்லூரியில் ேநற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழா முடிவில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என தலைமைகள் இருந்த காலம் வேறு. ஆனால், இப்போது இருக்கும் தலைமை முற்றிலும் வேறாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், அதிமுகவின் நிலை இனி என்னாகும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. என்னை பொறுத்தவரை எடப்பாடி தலைமையில் அதிமுகவின் நிலைமை கேள்விக்குறியாகிவிட்டது என்றார்.
