புதுடெல்லி: சமையல் காஸ் விலை தொடர்பாக மோடி அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் குறித்துக் கூக்குரலிட்ட பாஜ தலைவர்கள் , இப்போது ஏன் சிலிண்டர்களுடன் தெருக்களில் இறங்கிப் போராடவில்லை ஏன் என கேள்வி எழுப்பியது. நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்விலை ரூ.29 உயர்ந்துள்ளது. சென்னையில் காஸ் சிலிண்டர் ரூ.957.50க்கும் டெல்லியில் சிலிண்டர் ரூ.942க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
உயர்ந்துவரும் சமையல் காஸ் சிலிண்டர் விலை சாமானிய மக்களின் சமையலறைகளை பதம் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் வீட்டு உபபோய காஸ் சிலிண்டர்களின் விலையை அரசு ரூ.89 உயர்த்தியுள்ளது.
மேற்கு ஆசிய மோதல் விவகாரத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, 41 நாடுகளில் எரிபொருள் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பெரிய வாக்குறுதியை அளித்தார். அதனால் என்ன ஆனது? இன்னும் கிராமப்புறங்களில் எல்பிஜி காஸ் பற்றாக்குறை நீடிக்கிறது? உஜ்வாலா திட்டத்தின் கீழ், 2025-26 ம் ஆண்டில் 5.56 கோடி குடும்பங்களுக்கு ஒரு முறை கூட சிலிண்டர் நிரப்பப்படவில்லை. இவர்களில், 3.30 கோடி குடும்பங்கள் ஒரு சிலிண்டர் நிரப்பலைத் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்த நிலைமை மேற்கு ஆசிய நெருக்கடிக்கு முன்பே இருந்தது. இது மோடி அரசின் லாப வேட்டையினால் ஏற்பட்டது. ஐமு கூட்டணி ஆட்சியில், மோடியும் பாஜ தலைவர்களும் பணவீக்கம் ஏற்பட்டதாக கூக்குரலிட்டு வந்தனர். கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு காஸ் சிலிண்டர் விலையை ரூ.530 உயர்த்தியுள்ளது. தற்போது பாஜ தலைவர்கள் சமையல் காஸ் சிலிண்டர்களுடன் ஏன் போராட்டத்தில் இறங்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
