×

பாஜ மாநில செயலாளர் குறித்து அவதூறு கருத்து யூடியூபர் திருச்சி சூர்யா அதிரடி கைது: தலைமறைவான முத்தாரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: பாஜ விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் திருச்சி சூர்யாவை சென்னை சைபர் க்ரைம் போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு யூடியூபரான முக்தாரை பிடிக்க தனிப்படை அமைப்பட்டுள்ளது. பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா.

இவரது இரட்டைக் குழந்தைகள் குறித்து திருச்சி சூர்யாவும், முக்தாரும் அவதூறாக பேசியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து அலிஷா புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருச்சி சூர்யாவை (33) திருச்சியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை முடிந்ததும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருச்சி சூர்யாவை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் மற்றொரு யூடியூபரான முத்தார் தன் மீது அலிஷா அப்துல்லா புகார் அளித்த தகவலை அறிந்து தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து, அவரது சொந்த ஊரான வேலூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : BAJA ,SECRETARY OF STATE YOUTUBER ,TRICHI SURYA ,Chennai ,Trichy Surya ,Chennai Cybercrime Police ,Alisha Abdullah ,Bahja Sports Division ,Muktar ,YouTuber ,
× RELATED 49 நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு...