- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரேமலதா
- பிரேமலதா விஜயகாந்த்
- சட்டமன்ற உறுப்பினர்
- பொதுச்செயலர்
- தேமுதிகா பிரேமலதா விஜயகாந்த்
- கடலூர் மாவட்ட விரிதாசலம் பிஎல்ஏ அலுவலகம்
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள், நிதி நிலையை பார்த்து வாக்குறுதிகளை முதலமைச்சர் கொடுக்க வேண்டும். ஒரு சில வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிப்பெற்றுவிட்டால் நிச்சயம் மக்கள் கேட்பார்கள்.
தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. டாஸ்மாக் கடை மூடப்படும் என்பது கண் துடைப்பான அறிவிப்பாக உள்ளது. தமிழ்நாடு முழுக்க பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். பாலியல் வன்கொடுமைகள், சிறு குழந்தைகள் கூட பாதிக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். தேர்தல் முடிந்துவிட்டது, முதலமைச்சர் இதற்கு மேலும் பிரசாரம் செய்யாமல் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். எந்த கூட்டணியில் நாம் இருக்கிறோமோ அந்த கூட்டணிக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும், அதுதான் எங்கள் நிலைப்பாடு. திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம். இதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.
* தேர்தல் முடிந்துவிட்டது, முதலமைச்சர் இதற்கு மேலும் பிரசாரம் செய்யாமல் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும்

