தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் செயலாளராக சாந்தி பொறுப்பேற்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30ல் முடிவடைய இருந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பதவி விலகினார். இதையடுத்து சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பதவியேற்றார். அதன்பிறகே தனது ராஜினாமா முடிவை சீனிவாசன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற செயலாளர் பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்த நிலையில், சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தற்போது சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளராக இருந்து, பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் அர்லேகர் பிறப்பித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்ற செயலாளர் என்ற வரலாற்று சிறப்பை சாந்தி பெற்றுள்ளார்.

Related Stories: