மேலிடம் குறித்து புகார் ஜோதிமணியிடம் ஆதாரம் கேட்கும் காங்கிரஸ் எம்.பி.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை தர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இது பாராளுமன்ற ஜனநாயகத்தில் வாடிக்கையாக நடக்கின்ற ஒரு நிகழ்வுதான்.

சட்டம், ஒழுங்கை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு 6 மாதமாவது போதுமான அவகாசம் அளிக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் மேலிடம் குறித்து தொடர்ச்சியாக புகார் கூறி வரும் கரூர் எம்பி ஜோதிமணி, அதற்குரிய ஆதாரங்கள் இருந்தால் அதை அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி என்பதை இப்போது கூற முடியாது. உள்ளாட்சித் தேர்தல் வரட்டும். பிறகு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்போம்’’ என்றார்.

Related Stories: