மதுபாட்டில் பதுக்கி விற்ற தவெக நிர்வாகி கைது

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் தனிப்படை போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டதும், டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில் விற்று கொண்டிருந்த பாடாலூரை சேர்ந்த உமேஷ்(36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் உமேஷை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான உமேஷ் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தவெக செயற்குழு உறுப்பினர் ஆவார்.

Related Stories: