தேவதானப்பட்டி, ஜூன் 4: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் எஸ்.எஸ்.ஐ.,கோபிராஜா மற்றும் போலீசார் குள்ளப்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்த நாகு(67) என்பவரை கைது செய்தனர்.
