20 மதுபாட்டில்கள் பறிமுதல்

சின்னமனூர், ஜூன் 4: சின்னமனூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ சிவசம்புவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை – அம்மாபட்டி சாலையில், பேரூராட்சி கழிப்பிடம் அருகே கண்காணித்தார்.

அங்கு, மார்க்கையன்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தனதேவர் மனைவி பேச்சியம்மாள் (70) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து மொத்தம் 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: