திருச்சி, ஜூன் 4: திருச்சியில் ஆட்டோ திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் சையது உமர்அலி (25). இவர் புத்தூர் அருகே ஆட்டோ விற்பனை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி ஆட்டோவை கடையின் அருகே நிறுத்தி இருந்தார். அந்த ஆட்டோவை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
