தேவையானவை:
பூண்டு பற்கள் – 15
வரமிளகாய் – 7
கடுகு – ½ டீஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டு, வரமிளகாய் இவைகளுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். நல்லெண்ணெய், பூண்டு விழுதும் சேர்ந்து நன்கு கலந்து வரும்போது அடுப்பை அணைக்கவும். இது செரிமானப் பிரச்னைகளை தீர்த்து வயிற்றிலுள்ள வாய்வுகளை சரி செய்து நல்ல பசி எடுக்கும் ஆற்றலை தரக்கூடிய துவையலாகும்.
