திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு கனிமொழி வேண்டுகோள்

 

சென்னை: திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் விஜய்க்கு கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதல்வர் விஜய் செயல்பட போவது எப்போது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: