நீங்க தான் இப்போ முதல்வர்.! தேர்தல் “பிரச்சார Mood-ல” இருந்து வெளியே வாங்க விஜய்… தமிழிசை அட்வைஸ்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை, வழக்கம் போல பிரச்சார கூட்ட மேடை என்று நினைத்து பேசிய முதல்வர் விஜய்யை பல்வேறு தரப்பினரும் நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் விஜய் நேற்று திருச்சியில் பேசியதை பார்த்தேன். அதை பார்த்தால் அவர் முதல்வராகிவிட்டதை மறந்து இன்னும் தேர்தல் பிரச்சார Mood-லேயே இருப்பதை போலவே உள்ளது. தேர்தலும் முடிந்து விட்டது, அவரும் முதலமைச்சராகி விட்டார், எனவே விஜய் பிரச்சார Mood-ல் இருந்து வெளியே வர வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்கு எவ்வித காலக்கெடுவும் கேட்காமல் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சென்னை கோயம்பேடு பகுதியில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. 6 மாதம் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பதாக சொல்லி விட்டு குறை கூறுகிறார்கள் என்றெல்லாம் கூறுவதை ஏற்க முடியாது. நடப்பவற்றை எதிர்க்கட்சிகள் சொல்லத்தான் செய்வார்கள். வேறு கட்சியில் இருந்து மற்றவர்களை தங்கள் கட்சியில் சேர்க்கும் கவனத்தை, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் செலுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இந்த புதிய அரசு இன்னும் வேலையை தொடங்கவே இல்லை. பிளாக் & ஒயிட்டில் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். முழுவதும் பிளாக்-ஆக ஆகிவிடக் கூடாது என்று தமிழிசை கூறி இருக்கிறார்.

Related Stories: