மாநில காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பவுன்சருடன் விஜய் வலம் வருவது ஏன்..? அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி

சென்னை: மாநில காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பவுன்சருடன் விஜய் வலம் வருவது ஏன்..? என அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;

  • Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?
  • மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
  • அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?
  • அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
  • பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?

என அடுக்கடுகடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Related Stories: