ரூ.2500 கோடி பிணையப்பத்திரங்கள் வரும் 2ம் தேதி ஏலம்

சென்னை: ரூ.2500 கோடி மதிப்புள்ள பிணையப்பத்திரங்கள் வரும் 2ம் தேதி ஏலம் விடப்படும் என்று நிதித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூன் 2ம் தேதி ஏலம் நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் ஜூன் 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Related Stories: