டிரான்ஸ்பர் கேட்டு இந்த பக்கம் வந்துராதீங்க.. சுகாதாரத்துறை அமைச்சர் கண்டிப்பு

சென்னை: சுகாதரத்துறை அமைச்சர் அலுவலகத்தை தவெகவினர் முற்றுகையிட்டு வரும் நிலையில் டிரான்ஸ்பர் கேட்டு என்னை யாரும் அணுகக்கூடாது என அமைச்சர் திடீரென அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினர் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மேற்கொண்டு வரும் ஆய்வு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் தவெகவினரின் ஆய்வு நின்றபாடில்லை. இதற்கிடையில், தலைமைச் செயலகத்திலும் தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பணி மாறுதல், நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சில அமைச்சர்களை சந்திக்க தவெகவினர் குழுக்களாக சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகம் அரசு நிர்வாக மையமா? அல்லது கட்சி அலுவலகமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்நிலையில், பணி மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நேரடியாக என்னை அணுக வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலி பணியிடங்களின் விவரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: